கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள்

கிறிஸ்து பிறப்பு

கிறிஸ்து பிறப்பு விழாவை நினைவுட்டும் வகையில் டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்திலிருந்து சிறப்பாகக் கொண்டாட வியாபார உலகம் நம்மை அழைக்கிறது. திருஅவையும் நம்மைக் கிறிஸ்து பிறப்பு விழாவிற்குத் தயாரிக்கும் வண்ணம் திருவருவைக்கால வழிபாடுகள் வழியாக உதவுகின்றது.

இல்லங்களை அழகு படுத்துவதிலும், வண்ணவிளக்குகளால் அலங்கரிப்பதிலும், புத்தாடைகள் வாங்குவதிலும் நாம் செலுத்தும் கவனங்கள், நாம் அகவாழ்வில் கிறிஸ்துவை மையமாகக் கொண்டுள்ள இவ்விழாவில் எப்படி இருக்கின்றன? என்று சற்றுச் சிந்திப்போம்.

கிறிஸ்து பிறப்பு விழா நாயகன் இயேசுகிறிஸ்து, தேடிவந்த அன்பு! தேவன் வாக்களித்த அன்பு!! இன்று நம்மைத் தேடிவந்துள்ளது!!! நம் உள்ளங்களைத் திறந்து வைப்போம். அந்த அன்பை நிறைவாய் பெற்றுக் கொள்வோம். அத்துடன் நின்றுவிடாமல் அதனை மலர்ந்த முகத்துடன் அனைவருடன் பகிர்ந்து கொள்வோம். கிறிஸ்துபிறப்பின் மகிழ்ச்சி எளியோருக்கு முதலில் அளிக்கப்பட்டது போல நாமும் நம்மைச் சுற்றி இருக்கும் ஏழைஎளியோருடன் பகிர்ந்து கொள்வோம். தேவையில் இருப்போரைக் கவனிப்போம். தனிமையில் இருக்கும் முதியோருக்கு அன்பையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொடுப்போம். அந்த மகிழ்ச்சியை கொடுக்கும்போது நாம் பெற்றுக் கொள்கிறோம்! நம்மையும் கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்குத் தயார் செய்து கொள்வோம்.

சிறப்புமலரைப் பார்வையிடும் உங்கள் அனைவருக்கும் எமது கிறிஸ்துபிறப்பு விழா நல்வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம். சிறப்பு மலரை அலங்கரித்த எழுத்தாளர்கள் அனைவருக்கும் மற்றும் எம் இணையத்தளத்திற்கு உற்சாகம் அளித்துவரும் எம் ஊக்குவிப்பாளர்கள் அனைவருக்கும் எங்கள் இதயம் கனிந்த நன்றிகள் பல உரித்தாகுக!!!

என்றும் உங்கள் பணியில்
நவராஜன் - அன்பின்மடல்

இறையாசீர் என்றும் உங்களோடு!

💒👆🎅