முதலாம் தலம் |
இயேசுநாதரைச் சாவுக்குத் தீர்வையிடுகிறார்கள்திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றி கூறுகிறோம். ஏனெனில் உமது புனித சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டீர். திவ்விய இயேசுவே! சிலுவையிலே நீர் அறையுண்டு சாகத் தீர்வையிடப் பட்டதைத் தியானித்து, நாங்கள் உம்மை வணங்குகிறோம். அகோரத் தீர்வையிலே நின்று எங்களை மீட்டருளும் சுவாமி. ஒரு பர., அருள்., திரி. எங்கள் பேரில் தயையாயிரும் சுவாமி . எங்கள் பேரில் தயையாயிரும் சுவாமி . இறந்த விசுவாசிகள் இறைவனுடைய இரக்கத்தினால் அமைதியில் இளைப்பாறுவார்களாக! ஆமென். அடுத்தது |