இரண்டாம் தலம் |
இயேசுநாதரின் தோள்மேல் சிலுவையைச் சுமத்துகிறார்கள்.திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றி கூறுகிறோம். ஏனெனில் உமது புனித சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டீர். திவ்விய இயேசுவே! நீர் பாரமான சிலுவையைச் சுமந்து சென்றதைத் தியானித்து உம்மைத் ஆராதிக்கிறோம். எங்களுக்கு இவ்வுலகில் வருகிற வேதனைகளையும் தீமைகளையும் பொறுமையோடு அனுபவிக்க அருள்தாரும் சுவாமி. ஒரு பர., அருள்., திரி. எங்கள் பேரில் தயையாயிரும் சுவாமி . எங்கள் பேரில் தயையாயிரும் சுவாமி . இறந்த விசுவாசிகள் இறைவனுடைய இரக்கத்தினால் அமைதியில் இளைப்பாறுவார்களாக! ஆமென். அடுத்தது |