அருள்வாக்கு இன்று

மே 31-வெள்ளி

இன்றைய நற்செய்தி

லூக். 1: 39-56

இன்றைய புனிதர்


புனித மரியா-எலிசபெத்தைச் சந்தித்தல்

தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்" என்றார். லூக். 1:45

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில், இயேசுவைக் கருத்தாங்கிய மரியா, யூதேயா மலை நாட்டிற்கு விரைந்து சென்றாள். தூய ஆவியால் கருத்தாங்கியிருந்தாள். சென்று எலிசபெத்தை வாழ்த்தினார். இரு கருவறைகளும் சங்கமம். இங்கே திருமுழுக்கு யோவானின் ஜென்ம பாவம் இச்சந்திப்பால் கழுவப்பட்டது. எலிசபெத் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு, “ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் பேறு பெற்றது எப்படி? ஆண்டவருடைய வாக்கு உமக்கு நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறு பெற்றவள்” என்று எலிசபெத் வாழ்த்துரையைக் கேட்ட மாத்திரத்தில் இன்று நடந்த யாவும் இறைப்பிரசன்னத்தினால்தான் நடந்தது என்று அகமகிழ்ந்து பேருவகையோடு, “என் ஆண்டவரை எனது உள்ளம் ஏற்றிப் போற்றி மகிழ்கின்றது” என்ற பாடலை மரியா பாடினார்.

சுயஆய்வு

  1. ஆண்டவரின் வாக்கு என்னுள் மாற்றம் காண்கிறதா?
  2. நம்பிக்கை விண்மீன் ஒளிர்கின்றதா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே, உமது வருகை மரியின் வாயிலாக எழும்பிய ஒளியாகிடும் வரம் தாரும். ஆமென்..

அன்பின்மடல் முகப்பு