அருள்வாக்கு இன்று

மே 30-வியாழன்

இன்றைய நற்செய்தி

மாற்கு 10:46-52

இன்றைய புனிதர்


புனித ஜோன் ஆஃப் ஆர்க்

தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

இயேசு அவரிடம், "நீர் போகலாம்; உமது நம்பிக்கை உம்மை நலமாக்கிற்று" என்றார். உடனே அவர் மீண்டும் பார்வை பெற்று, அவரைப் பின்பற்றி அவருடன் வழி நடந்தார். மாற்கு 10:52

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு எரிக்கோ வந்தபோது இங்கு பர்த்திமேயு எனும் பார்வையற்ற ஒருவர் இயேசு வருகின்றார் என்று கேட்டதும், ”தாவீதின் மகனே எனக்கு இரங்கும்” என்ற கூப்பிட்டார். சீடர்கள் தடுத்தும் மீண்டும் கத்தி கூப்பிட்டார். இயேசு இதனை கண்டு அவரை கூப்பிட்டு ”உமக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டார். அதற்கு பர்த்திமேயு "ரபூணி, நான் மீண்டும் பார்வை பெறவேண்டும்" என்றார். ”நீர் போகலாம் உமது நம்பிக்கை உன்னை நலமாக்கிற்று” என்றார். உடனே பார்வை மீண்டும் பெற்று இயேசுவை பின் தொடர்ந்தார். ஆம் அன்பர்களே! நாம் இறைவனிடம் நம்பிக்கைக் கொண்டு கேட்கும் பெற்றுக் கொள்வோம்.

சுயஆய்வு

  1. இயேசு வருகிறார் என்பதை அறிந்த நான் என்ன நினைப்பேன்?
  2. நம்பிக்கையோடு எனது கோரிக்கையை கேட்கிறேனா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! என் நம்பிக்கை என் ஆற்றல் எல்லாம் என் தேவன் என்ற வேண்டும் வரம் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு