அருள்வாக்கு இன்று
மே 29-புதன்
இன்றைய நற்செய்தி
இன்றைய புனிதர்
புனித மாக்சிமீனுஸ்
புனித மாக்சிமீனுஸ்
நீதியுள்ள தந்தையே, உலகு உம்மை அறியவில்லை; ஆனால் நான் உம்மை அறிந்துள்ளேன். நீரே என்னை அனுப்பினீர் என அவர்களும் அறிந்து கொண்டார்கள். மாற்கு 10:31
இன்றைய நற்செய்தியில், இயேசு, மானிடராகப் பிறந்தவர்கள், அடுத்தவர் நலனில் அக்கறை கொண்டவர்களாக இருத்தல் அவசியம் என்று கூறுகிறார். காரணம், இவ்வுலக வாழ்வில் சுயநலமே மேலோங்கி நிற்பதை நாம் காண்கிறோம். இந்நிலை மாறிப் பொதுநலம் காணவும், எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக எனும் இறைமகனின் வேண்டுகோள் ஒவ்வொருவரின் இதயத்திலும் எழுதப்பட வேண்டும். இவ்வுலக வாழ்வின் மதிப்பீடே மறுவுலக வாழ்வின் அடித்தளமாகும். எனவே சுயநலத்தைத் தவிர்ப்போம். இவ்வுலக வாழ்வின் முதன்மை இருக்கைகளை வறியோருக்காய் விட்டுக் கொடுப்போம். இன்று முதன்மையானோர், மறுவாழ்வில் கடைநிலை என்பதை மனதில் பதிவு செய்து, இறை-மனித உறவில் சமத்துவம் காண்போம்.
அன்பு இயேசுவே, எனக்குள்ளதை அடுத்தவரிடம் பகிர்ந்து வாழும் வரம் தாரும். ஆமென்.