அருள்வாக்கு இன்று

மே 26-ஞாயிறு

இன்றைய நற்செய்தி

மத். 28: 16-20

இன்றைய புனிதர்


புனித பிலிப்பு நேரி

தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

மூவொரு கடவுள் பெருவிழா
அருள்மொழி:

நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்" என்று கூறினார். மத். 28:20

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில், இயேசு, உண்மையை வழிநடத்தும் தூய ஆவியாரை நமக்கு அனுப்புகின்றார். நமது தாய் திருஅவை தூய ஆவியார் பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்கின்ற வேளையில், இறைமகனின் விண்ணேற்றத்திற்குப் பிறகு புனித கன்னி மரியாளும், பன்னிரு சீடர்களும் ஓரு மேல் மாடி அறையில் கூடியிருக்கும்போது தூய ஆவியார் அன்னை மரியாள் மீதும், பன்னிரு தூதர்கள் மீதும் இறங்கி வந்தார். அன்றே புனித பேதுரு மூவாயிரம் பேருக்கு திருமுழுக்குக் கொடுத்து முதல் திருஅவை உண்டானது. இறைமகன் சொன்னபடி உலகம் முடியும் வரை எந்நாளும் உங்களுடன் இருப்பேன் என்பதற்குச் சான்றாகத் தூய ஆவியார் இவ்வுலகில் எந்நாளும் இயங்கிக் கொண்டிருக்கின்றார். நாமும் அவரில் இயங்குகின்றோம் என்பதை மனதில் பதிவு செய்வோம்.

சுயஆய்வு

  1. மூவொரு கடவுளை அறிகிறேனா?
  2. தந்தை, மகன், தூய ஆவியார் ஒரே கடவுள் என்பதை உணர்கிறேனா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே, மூவொரு இறைவனாக நீர் வலம் வருகின்றீர் என்பதை உணர்ந்து வாழும் வரம் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு