அருள்வாக்கு இன்று

மே 25-சனி

இன்றைய நற்செய்தி

மாற்கு 10 : 13-16

இன்றைய புனிதர்


பாத்சி நகர் புனித மகதலா மரியா

தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

இயேசு இதைக் கண்டு, கோபம் கொண்டு, "சிறு பிள்ளைகளை என்னிடம் வர விடுங்கள். அவர்களைத் தடுக்காதீர்கள். ஏனெனில் இறையாட்சி இத்தகையோருக்கே உரியது. மாற்கு 10:14

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில், இயேசுவிடம் சிறுபிள்ளைகளைக் கொண்டு வந்தனர். இதனைக் கண்டச் சீடர்கள் தடுத்தனர். “சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள். இறையாட்சி இத்தகையோருக்கு” என்பதைப் பதிவு செய்கின்றார். எப்படி எனில், அவர்கள் கள்ளம் கபடமற்ற பிஞ்சு உள்ளங்கள். நன்மை எது? தீமை எது? என்று அறியாதவர்கள். இத்தகைய மனம் கொண்டு நாம் வாழ்வது கடினம். நாம் இவ்வுலக ஆசாபாசங்களில் மூழ்கி, இறையாண்மையை இழந்து விடுகின்றோம். காரணம், நம்மிடம் சுயநலம் மேலோங்கி நிற்கின்றது. இதனைக் கடந்து வரவேண்டுமானால், நாம் கல்லான இதயத்தை எடுத்து விட்டு, குழந்தை மனம் கொள்வோம். அப்போது இறையாட்சி இம்மண்ணில் மலரும். நாமும் இறைவன்பால் சேர்வோம்.

சுயஆய்வு

  1. சிறுபிள்ளைகளின் மனம் அறிகிறேனா?
  2. இறையரசில் சேர என் முயற்சி யாது?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே, சிறு குழந்தையின் மனம் கொண்டு வாழும் வரம் தாரும். ஆமென்

அன்பின்மடல் முகப்பு