அருள்வாக்கு இன்று

மே 19-ஞாயிறு

இன்றைய நற்செய்தி

இன்றைய புனிதர்


பெந்தக்கோஸ்து ஞாயிறு

தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

பெந்தக்கோஸ்து ஞாயிறு
அருள்மொழி:

அவரே தந்தையிடமிருந்து வந்து உண்மையை வெளிபடுத்தும் தூய ஆவியார் அவர் வரும் போது என்னைப் பற்றி சான்றுச் பகர்வார்.

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு தனக்குப் பின் வரும் தூய ஆவியாரை வெளிப்படுத்துகின்றார். எப்படியெனில் உலகம் தோன்றியது முதல் அவரின் ஆற்றல் நீரிலும் நிலத்திலும் உலகெங்கும் அசைவாடிக் கொண்டிருந்தது. அவரது ஆற்றலால் உலகமே இயங்கிக் கொண்டிருக்கின்றது. அவரே உம்மையும் ஆட்கொண்டு தம் மக்களை வழி நடத்துவார். அப்போது நீங்கள் தூயஆவியாரின் ஆற்றலால் சான்று பகர்வீர்கள் என்பதை தம் சீடர்களுக்கு சொல்கின்றார். அவர் தந்தையிடம் சென்ற பிறகு தன் சீடர்கள் தன்னை இழந்து விட்டோமே என்று ஏங்கும் நிலை தெரிய வந்தது. எனவே தேற்றுபவரை உனக்கு அளிக்கின்றேன் என்றார்.

சுயஆய்வு

  1. தூய ஆவியானவரை என்னுள் ஆட்கொள்ள நான் என்ன செய்கின்றேன்?
  2. அதன் ஆற்றல் எத்தையது என்பதை உணர்ந்துள்ளேனா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! உமது துணையாளரை என்னுள் அனுப்பி என்னை ஆட்கொள்ளும் வரம் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு