அருள்வாக்கு இன்று

மே 18-சனி

இன்றைய நற்செய்தி

யோவான். 21:20-25

இன்றைய புனிதர்


புனித முதலாம் யோவான்-திருத்தந்தை

தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

இயேசு அவரிடம் நான் வரும் வரை இவன் இருக்க வேண்டும் என நான் விரும்பினால் உனக்கு என்ன? நீ என்னைப் பின் தொடர்ந்து வா என்றார்.

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் தன் அன்பு சீடர் யோவானை பற்றி பேதுருவின் கேள்விக்கு பதில் கூறுகின்றார். நான் வரும் வரை இவன் இருக்க வேண்டும் என்பதை புரிந்து கொள்ளாத பேதுரு அவன் சாகமாட்டானா? என்ற கேள்விக்கு சென்று விடுகின்றார். இதன் கருப்பொருள் என்னவென்றால் இறைமகன் மீண்டும் வருவார். வரும் வரை புனித யோவான் தன்னுடன் இருந்தவர். அனைத்தையும் அறிந்தவர் இவரே நற்செய்தியின் ஆசிரியராக இருப்பார். இவர் எழுதிய உயிருள்ள இறை வார்த்தைகள் என்றுமே அழியாது. இறைமகன் தன் இரண்டாம் வருகையின் போதும் இவை இருக்கும் என்பதை தான் இயேசு இவன் நான் அவரும் வரை இருக்க வேண்டும் என்பதின் பொருள். எனவே நாம் இதனை ஏற்று வாழ்வில் தடம் பதிப்போம்.

சுயஆய்வு

  1. புனித யோவானை போன்று அன்பு சீடர், சீடத்தியாக என் நிலை என்ன?
  2. அதற்காக நான் எடுக்கும் முயற்சி யாது?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! உமது அன்பில் நான் திளைத்திருக்க வரம் தாரும்.ஆமென்.

அன்பின்மடல் முகப்பு