அருள்வாக்கு இன்று

மே 16-வியாழன்

இன்றைய நற்செய்தி

யோவான். 17:20-26

இன்றைய புனிதர்


புனித சிமியோன் ஸ்டாக்

தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக தந்தையே! நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பது போல அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக.

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் பிளவுபட்டு பல பாதைகளில் சிதைந்து போனவர்களை மீட்டு எடுத்தார். அனைவரையும் ஒன்றினைக்கும் பாலமாக திகழ்ந்தார். தான் தன் தந்தையிடம் செல்லும் நேரம் வந்ததும் தன் மக்களுக்காக தந்தையிடம் வேண்டுகின்றார். அனைவரும் ஒன்றாய் இருக்க வேண்டும். தந்தையும் மகனும் இணைந்திருப்பது போல தன் மக்களும் தந்தையும் இணைந்திருக்க வேண்டும் என்பதே இறைமகனின் பணி. எனவே வேண்டுகிறார். அவரது வேண்டுதலை நாமும் கேட்போம். செபிப்போம். இணைந்து வாழ்வோம். இறைவனில் சேர்வோம்.

சுயஆய்வு

  1. ஒன்றாக இருக்க எனது முயற்சி யாது?
  2. எனக்கு அடுத்தவரில் இணைத்து கொள்ள எனது முயற்சி யாது?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! எல்லாரும் ஒன்றாய் இருக்க எனது செபமும் இணைந்திட வேண்டிய வரம் தாரும் .ஆமென்.

அன்பின்மடல் முகப்பு