அருள்வாக்கு இன்று

மே 15-புதன்

இன்றைய நற்செய்தி

யோவான். 17:11b-19

இன்றைய புனிதர்


புனித இசிதோர்

தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

அவர்களை உலகிலிருந்து எடுத்து விடவேண்டுமென்று நான் வேண்டவில்லை. தீயோனிடமிருந்து அவர்களைக் காத்தருள வேண்டுமென்றே வேண்டுகிறேன்.

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு தம் சீடர்களை தனது மக்களை தீய சக்திகளிடமிருந்து காக்குமாறு தன் தந்தையிடம் வேண்டுகின்றார். எப்படியெனில் தான் இவ்வுலகில் இருக்கும் வரை அவர்களை காத்து வந்தார். ஆனால் அவர் தன் தந்தையிடம் செல்லும் நேரம் வந்துவிட்டது. எனவே தான் தன் அன்பு சீடர்களை பாதுகாக்க வேண்டுமென்று தன் தந்தையிடம் நெஞ்சுருக வேண்டுகின்றார். நாமும் அடுத்தவருக்காக மனமுருகி வேண்டுவோம். நாமும் மீட்பு பெற்று அடுத்தவரையும் வாழ வைப்போம். இறையாட்சியில் சேர்ப்போம்.

சுயஆய்வு

  1. நான் அடுத்தவருக்காகக் செபிக்கின்றேனா?
  2. தீயவற்றிலிருந்து மீள முயல்கின்றேனா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! நான் உமது அன்பை என்றும் மறவாமல் உமது ஒன்றிப்பில் வாழும் வரம் தாரும்.ஆமென்.

அன்பின்மடல் முகப்பு