அருள்வாக்கு இன்று
மே 13-திங்கள்
இன்றைய நற்செய்தி
யோவான். 16:29-33
இன்றைய புனிதர்
புனித பாத்திமா நகர் அன்னை மரியா
யோவான். 16:29-33
புனித பாத்திமா நகர் அன்னை மரியா
உலகில் உங்களுக்குத் துன்பம் உண்டு. எனினும் துணிவுடன் இருங்கள். நான் உலகின் மீது வெற்றிக் கொண்டுவிட்டேன் என்றார்.
இன்றைய நற்செய்தியில் இயேசு உலகில் நீங்கள் நற்செய்தியை பறைசாற்றும்போது அனேக துன்பங்களை நீங்கள் அடைவீர்கள். அதனை மேற்க் கொள்ள எனது உடனிருப்பு உங்களுக்கு உண்டு. துணையாளர் என்றும் உங்களை வழி நடத்துவார். அவரது ஆற்றலில் நீங்கள் இயங்குவீர்கள். எதற்கும் அஞ்ச வேண்டாம். துணிவுடன் இருங்கள் என்று நமக்கு ஆறுதல் அளிக்கின்றார். இந்த உலகில் எதையும் கொண்டு வரவில்லை. எதையும் கொண்டுபோவதில்லை. எப்படி மாசற்றவராக்கப் பிறந்தோமோ அதேபோல் இவ்வுலகை விட்டு விலகும்போதும் மாசற்றவராகச் செல்லவே நமக்கு அழைப்பு விடுக்கின்றார். பாத்திமாநகர் அன்னை செய்திகளை மனதில் உள்வாங்கி செபமாலை செபிப்போம்
அன்பு இயேசுவே! நான் என்றும் துணிவோடு பணியாற்ற வரம் தாரும். .ஆமென்.