அருள்வாக்கு இன்று

மே 12-ஞாயிறு

இன்றைய நற்செய்தி

மாற்கு. 16:15-20

இன்றைய புனிதர்


ஆண்டவரின் விண்ணேற்றவிழா

தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

ஆண்டவரின் விண்ணேற்றவிழா
அருள்மொழி:

நம்பிக்கைக் கொண்டு திருமுழுக்கு பெறுவோர் மீட்பு பெறுவர். நம்பிக்கையற்றவரே தண்டனை தீர்ப்பு பெறுவர். மாற்கு. 16:16

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு நம்பிக்கை கொண்டு திருமுழுக்கு பெறுபவர் கண்டிப்பாக மீட்பு பெறுவர். அவர்கள் இறையாட்சியில் அமர்வார்கள். இவ்வார்த்தை வழியாக இறைவன் பேசுகின்றார். அதில் அவரது வார்த்தைகள் உயிருள்ளவை, ஊட்டமுள்ளவை. மனிதனை முழு மனிதனாக மாற்றும் சக்தி கொண்டது. இவ்வுலகில் நாம் பெறும் அற்ப சுகம் நிலையற்றது என்பதை நமக்கு உணர்த்தும் கூறிய வாள் போன்றது. எனவே இறைவனது வார்த்தைகள் பாதாளம் வரை பாயும் ஆற்றல் கொண்டது. என்கின்றார். எனவே இறைவார்த்தையில் நம்பிக்கை கொள்வோம்.

சுயஆய்வு

  1. இறைவனது வார்த்தை என்னுள் காணும் மாற்றம் யாது?
  2. அதனைச் சுவைக்க நான் மேற்கொள்ளும் முயற்சி யாது?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! உமது வார்த்தைகள் என்னுள்ளும் நான் உமக்குள்ளும் சங்கமித்து வாழும் வரம் தாரும். .ஆமென்.

அன்பின்மடல் முகப்பு