குருத்தும் - கருத்தும்

கஸ்மீர் ரோச், 9382709007
palmsunday


தவக்காலத்தின் முத்தாய்ப்பாய் குருத்து ஞாயிறு வந்தது.
palm cross காலையில் விரைவாக சென்றால் நல்ல குருத்து கிடைக்கும்.
இந்த வேகம் ஏன் மற்ற வாரங்களில் நம்மிடம் காணப்படுவதில்லை ?
வீட்டிலிருந்து வர இயலாதவர்,வர மறுப்பவர் யாவருக்கும் உரிமையுடன் குருத்து பெற போராட்டம்.
அதே வேளையில் அவ்விதமே அவர்களுக்காகவும்,அவர் தம் தேவைக்காகவும் செபிக்கிறோமா ?
கிடைக்கும் குருத்து நிமிர்ந்து நிற்கிறதா ? என ஒரு ஆதங்கம்.
இத்தவக்கால தவமும், செபமும், தியாகமும், நம்மை இறைவன் முன் நிமிர்ந்து நிற்க வைத்துள்ளதா ?
"தாவீதின் மகனுக்கு ஓசன்னா" என வழியெங்கும் பறை சாற்ற பாடகர் குழு தயார்.
பாடல் நமக்கு தெரியாது என்றோ, வழியில் பாடுவதா ? என மௌன பவனியாக மாற்ற முயல்கிறோமா ?
பவனி முடிவில் அருமையான கூட்டு திருப்பலிக்கு அனைத்தும் தயார்.

palm crossஆனால்,நம் சிந்தனை திறமைகளை தட்டி விட்டு, விதவிதமான சிலுவை சிற்பிகளாக மாறி விட்டோமா ?
பாதி திருப்பலியில் அரக்க பறக்க வந்து குருத்து கிடைக்காமல் நிற்கும் ஒருவருக்கேனும் நம் கையிலிருக்கும் குருத்து பரிமாறப்படுகிறதா ?
அவருக்கு ஒரு குருத்து ஓலை பகிர மனமில்லையென்றால் நம் தவக்கால முயற்சிகள் எப்படியிருக்கும் ?
மந்திரிக்கப்பட்ட ஒரு பொருளும் தரையில் வீணே எறியக்கூடாது என்பர் பெரியோர்.


ஆனால்,இதோ திருப்பலி முடிவில் சிற்பிகள் செதுக்கியது போக
கிழித்தும், கசக்கியும், நசுக்கியும் மீதமான ஓலைகள் தரையில்.
நம் பங்கு என்ன?

coconutfarmer
இந்த குருத்தோலைகள் எப்படி பெறப்பட்டது ?
எங்கிருந்து வந்தது ?
இந்த வறட்சியிலும் மனமுவந்து தந்தவர்கள் யார் ?
தைரியமாக மரமேறி வெட்டிய இளைஞர் யாவர் ?
அறிய முயற்சிக்கிறோமா ? அவர்களை மனதார பாராட்டியிருக்கிறோமா ?

இறுதியில் இவர்கள்அனைவருக்காகவும்,
அவர்கள் தியாகத்துக்காகவும் செபிப்போம்.
இவ்வருட குருத்து ஞாயிறன்று குருத்தின் முக்கியத்துவத்தை
விட பங்களிப்பின் முக்கியத்துவத்தை உணர்வோம்.

ஆண்டவரை மகிழ்வுடன் வரவேற்ற பாக்கியமான
குருத்தோலையை பக்தியுடன் இல்லத்தில் அரியணையேற்றுவோம்.