அருள்வாக்கு இன்று
ஏப்ரல் 14-ஞாயிறு
இன்றைய நற்செய்தி
லூக்கா 24:35-48
இன்றைய புனிதர்
புனித திபுர்சியுஸ்
லூக்கா 24:35-48
புனித திபுர்சியுஸ்
அவர்கள் வழியில் நிகழ்ந்தவற்றையும் அவர் அப்பத்தைப் பிட்டுக் கொடுக்கும்போது அவரைக் கண்டுணர்ந்துகொண்டதையும் அங்கிருந்தவர்களுக்கு எடுத்துரைத்தார்கள். லூக்கா24:35
இன்றைய நற்செய்தியில் இயேசு எம்மாவுச் சீடர்களுக்குத் தோன்றுகிறார். அவர் மசியா தான் என்று அவரது கண்கள் மறைக்கப்பட்டிருந்தது. அவர்கள் அவரோடு உயிர்த்த ஆண்டவரைப் பற்றி உரையாடல் செய்து வந்தனர். அவர்களது வீட்டிற்கு சென்று பந்தியமர்ந்து அப்பத்தை எடுத்துப் பிட்டு இறை புகழ்பாடி அதனைப் பகிர்ந்தளித்தபோது அவர்களது அகக்கண்கள் திறக்கப்பட்டது. இறைமகனைக் கண்டு தொழுது மகிழ்ந்தனர். எனவே நாமும் இவ்வுலக மாயைகளில் திளைத்து உண்மை வழியைத் தொலைத்து நமது கடவியைத் தரிசிக்கும் நிலையைத் தொலைத்து விட்டுத் தடுமாறுகின்றோம். எனவே இறையாண்மையில் திளைத்து நமது பாவங்களுக்குப் பரிகாரம் செய்தும் இறை - மனித - உறவில் சங்கமித்து வாழ இன்றைய நற்செய்தி நமக்கு அழைப்பு விடுக்கின்றது. அதனால் இறைவனில் சங்கமிப்போம்.
அன்பு இயேசுவே! உமது பிரசன்னத்தில் ழுழ்கி உம்மோடு உறைந்திடும் வரம் தாரும். ஆமென்.