அருள்வாக்கு இன்று
ஏப்ரல் 13-சனி
இன்றைய நற்செய்தி
யோவான் 6:16-21
இன்றைய புனிதர்
புனித முதலாம் மார்டின்
யோவான் 6:16-21
புனித முதலாம் மார்டின்
இயேசு அவர்களிடம், “நான்தான், அஞ்சாதீர்கள்” என்றார். யோவான் 6:20
இன்றைய நற்செய்தியில் இயேசு தன் சீடர்களை நோக்கி அஞ்சாதீர்கள் என்கிறார்.ஏன்றால் இயேசு கடல் மீது நடந்து வருவதை கண்டு என்னவோ ஏதோ தீய ஆவியோ என்று எண்ணி பயப்படுகின்றார்கள். அவர்களின் விசுவாமின்மையைக் கண்ட இயேசு அவர்களை நோக்கி அஞ்சாதீர்கள் 'நான் தான்" என்கிறார். அன்பு சகோதரர்களே இயேசுவின் வார்த்தைகள் நமக்குள்ளும் நாம் அவருள்ளும் சங்கமிக்கும் போது ஏன் பயம். சீடர்கள் முழுமையாக இறைமகனை அறியாமையாலும் உணராமலும் இருந்தமையால் அஞசினார்கள். எனவே நாமும் இயேசுவை நமக்குள் பிவு செய்ய நாம் நமது நிலைகளை விட்டு கீழ் இறங்கி வந்து அவரது மதிப்பிடுகளை நமது வாழ்விலும் அடுத்தவரின் வாழ்விலும் செயல்வடிவம் கொடுப்போம்.அப்போது நாம் எதற்கும் அஞ்சாமல் என்ன அவதூறுகள் வந்தாலும் இயேசுவோடு இணைந்து பணி செய்வோம் என்பது உறுதி.
அன்பு இயேசுவே! நான் இவ்வுலக நாட்டங்களை கானல் நீர் என கருதும் வரம் தாரும். ஆமென்.