அருள்வாக்கு இன்று
ஏப்ரல் 11-வியாழன்
இன்றைய நற்செய்தி
யோவான் 3:31-36
இன்றைய புனிதர்
புனித ஸ்தனிஸ்லாஸ்
யோவான் 3:31-36
புனித ஸ்தனிஸ்லாஸ்
தந்தை மகன்மேல் அன்பு கூர்ந்து அனைத்தையும் அவர் கையில் ஒப்படைத்துள்ளார். யோவான் 3:35
இன்றைய நற்செய்தியில் உயிர்த்த இயேசுவை தந்தை அளவுகடந்த அன்பால் நிறைவு செய்துள்ளார். என்பதை ஊர்ஜிதமாகின்றது. தன் மகனிடம் நம்பிக்கை கொள்வோர் அவர் தந்தையே அன்பு செய்கின்றனர். எனவே தான் இறைகுலம் மனுகுலம் முழுவதற்கும் முத்தாய்ப்பாக இறைமகன் இயேசு மரித்த உயிர்த்து இந்த மானுடத்தை வென்றார். எனவே தான் இயேசுவுக்கு மூவுலோதரும் மண்டியிடுவர் என்பது இறைவாக்கினாரின் வாக்காக அமைந்தது. ஏனெனில் அவர் விண்ணிலிருந்து வந்தவர் மீண்டும் விண்ணிற்குச் சென்றார். சென்று அவரது துணையாளரை நமக்கு அனுப்பியுள்ளார். அவரை அன்பு செய்வோம்.
அன்பு இயேசுவே! உமது ஆழ அகல எல்லை காண அன்பில் நான் மூழ்கிட வரம் தாரும். ஆமென்.