ஆன்மீகக் குடில்
அருட்தந்தை எட்வர்ட் செல்வராஜ்- கோடம்பாக்கம் சென்னை
கிறிஸ்மஸ் குடில் அமைக்க ஆர்வத்துடன் முன் தயாரிப்பு செய்யும் நாம் நமது உள்ளத்தில் ஆன்மிகக் குடில் தயாரிக்கத் திட்ட உதவும் வகையில் ஒர் ஆன்மீக முயற்சி. இந்த முயற்சியில் வெற்றிபெற்றால் உண்மையில் நம் உள்ளத்தில் இல்லத்தில் குழந்தை இயேசு பிறந்திடுவார். வாருங்கள் அவரை ஆராதிப்போம்.
வ.எண் | நாள் | பொருள் தயாரிப்பு | ஆன்மிக தயாரிப்பு |
---|---|---|---|
1 | 30.11.2014 | குடில் அமைக்கத் திட்டமிடல் | 5000 மனவல்லிய செபம் சொல்லவும்,உதா.இயேசுவே தாவீதின் மகனே என் மேல் இரக்கமாயிரும் |
2 | 01.12.2014 | செலவுத் தொகை நிர்ணயித்தல் | மகிழ்ச்சி மறையுண்மைகள் சொல்லவும் |
3 | 02.12.2014 | 12 மூங்கில் குச்சிகள் வாங்கவும் | 12 இஸ்ரயேல் குலங்கள், 12திருதூதர்களை நினைவில் கொள்க, லூக்கா 2: 41-52 வாசிக்கவும் |
4 | 03.12.2014 | வைக்கோல் வாங்கவும் | கர்த்தர் கற்பித்த செபம் 50 முறை சொல்லவும் |
5 | 04.12.2014 | தேங்காய் நார் கயிறு வாங்கவும் | அசிசியார் ஜெபம் 3 முறை சொல்லவும் |
6 | 05.12.2014 | தரைமிதியடி வாங்கவும் | கிருபை தயாரத்து செபம் 5 முறை சொல்லவும் |
7 | 06.12.2014 | குழந்தையை சுற்றும் துணி வாங்கவும் | விசுவாசபிரமாணம் 3 முறை சொல்லவும் |
8 | 07.12.2014 | குழந்தை ஆடை வாங்கவும் | மனத்துயர் ஜெபம் 10 முறை சொல்லவும் |
9 | 08.12.2014 | விளக்கு வாங்கவும் | கிறிஸ்துவின் ஆத்மமே 5 முறை சொல்லவும் |
10 | 09.12.2014 | பனைஓலை வாங்கவும் | துயர் மிகு மறையுண்மைகள் சொல்லவும் |
11 | 10.12.2014 | கழுதைக்குஉணவுவாங்கவும் | தியாகம் செய்யவும்ஃ 10 நிமிடம் ழுழங்தாளிடவும் |
12 | 11.12.2014 | குழந்தைக்கு உணவு வாங்கவும் | குழந்தைக்கு உணவு கொடுக்கவும் |
13 | 12.12.2014 | திடல் அமைக்கவும் | மத்தேயு 5:1-16 வாசிக்கவும் |
14 | 13.12.2014 | குச்சிகளை வைத்து கூரை அமைக்கவும் | மத்தேயு 1:1-25 வாசிக்கவும் |
15 | 14.12.2014 | ஓலைகளை வைத்து கூரையை முடிக்கவும் | லூக்கா 1:1-38 வாசிக்கவும் |
16 | 15.12.2014 | கூரையின் மேல் வைக்கோல் வைக்கவும் | லூக்கா 1:39-56 வாசிக்கவும் |
17 | 16.12.2014 | வீட்டிற்குள் பாகங்கள் பிரிக்கவும் | மகிமை மறையுண்மைகள் சொல்லவும் |
18 | 17.12.2014 | விளக்குகள் அமைக்கவும் | லூக்கா 2:1-21 வாசிக்கவும் |
19 | 18.12.2014 | தரைமிதியடி இடவும்,குழந்தைக்கு தொட்டில் அமைக்கவும் | ஒளியின் மறையுண்மைகள் சொல்லவும் |
20 | 19.12.2014 | ஊசி நூல் எடுத்துக்கொள்ளவும் | திருப்பலி பங்குபெறு ஒப்புக்கொடுக்கவும் |
21 | 20.12.2014 | துணியை துண்டுகளாக வெட்டித் தைக்கவும் | ஒருநேர உணவை தியாகம் செய்யவும் |
22 | 21.12.2014 | ஆடையை அலங்காரம் செய்யவும் | பாவசங்கீர்த்தனம் செய்யவும் |
23 | 22.12.2014 | குழந்தைக்கு முத்து மாலை செய்யவும் | தர்மகாரியங்களில் ஈடுபடவும் |
24 | 23.12.2014 | குழந்தைக்கு வளையல், மோதிரம், தொப்பி, கை கால் உறைகள் தயாரித்தல் | நற்கருணைநாதருடன் செலவிடுதல் |
25 | 24.12.2014 | குழந்தைபிறந்தது | உலகுக்கு மகிழ்ச்சி உண்டாகுக என பாடவும் |