அருள் நிறைந்த மரியே நின்னடி பணிந்தேன்

திருமதி அருள்சீலி அந்தோணி -ஆலந்தூர்
our lady of velankanni

  


ன்பினில் உதித்த இனிய நல் இயேசுவே
ருவினில் தாங்கிய கன்னிமேரியே
அருள் தனைப் பொழியும் அமலியே! நாளும்
உளம் நினைந்து வேண்டுவோர் வாழ்வை
வளம் நிறைப் பொழிந்து மலரச் செய்வாய்!
மானிடரை மீட்க ண்ணில் மனு வுருவான
இறையினை பரிவுடன் உவந்து
அளித்திடும் தாயே! வருந்துவோர்
குறையை நீக்கிடும் நிர்மலனின் பேழையே!
மண்ணேர் பாவத்தை மன்னிக்க நாளும்
விண்ணோர் அரசியே கன்லின் சுவையே
அஞ்சலி புரிந்து அண்டிடும் வறியோர்
சஞ்சலம் போக்கும் இன்ச்சுடரே!
வேளை மாநகரிலிருந்தே இராணியே!
வேண்டிடும் ஏழைக்கு வேண்டிய வரந்தனை
உன் திருமகனின் உளம் மகிழ்ந்தே தாரும்
நாளும் துதித்து மகிழ்ந்துப் பணிந்தேன்